கிணற்றில் பெண் பிணம்

கிணற்றில் பெண் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2023-07-16 19:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது தாயார் சின்னழகு (வயது 47) இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மம்சாபுரம் அருகே உள்ள கிணற்றில் சின்னழகு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கிணற்றில் கிடந்த சின்னழகுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்