பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.1,000 விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

Update: 2023-06-30 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவை அடைந்துள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கு

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

விலை நிர்ணயம்

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் டன் ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையான மரவள்ளிக்கிழங்கு தற்போது டன் ரூ.1,000 வரை சரிவடைந்து ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை சரிவடைந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்