விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

அய்யன்கொல்லியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-13 19:45 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க நிர்வாகி குரியாகோஸ் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்