பாம்பு கடித்து விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.

Update: 2022-08-21 17:57 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள சொல்லேபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 55). விவசாயியான இவர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. வலியால் துடித்த அவரை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்