விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-10-03 21:29 GMT

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்  ரவி( வயது60). விவசாயியான இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவா் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்