சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 02:21 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06029) வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070) வரும் 4, 11, 18 ஆகிய தேதிகள் வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069) வரும் 5, 12, 19 ஆகிய தேதிகள் வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்