டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

Update: 2023-05-28 18:45 GMT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரத்தில் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 1059 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையத்தில் தேவையான வசதிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்