நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு 4 ஆண்டு சிறை

நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2023-09-07 18:50 GMT

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா, டிரைவர். இவர் தனது நண்பரின் மனைவியான 29 வயது பெண்ணை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இளையராஜாவை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்