மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.

Update: 2023-10-21 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கல்பனா (வயது 50). இவர் காவேரிப்பட்டணம் பி.வி.எஸ். மில்மேடு பகுதியில் உள்ள புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான நிப்பட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கல்பனா புருஷோத்தமனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு கம்பெனிக்கு சென்றார். அப்போது காவேரிப்பட்டணம்- தர்மபுரி சாலையில் சென்றபோது பிரேக் பிடித்தபோது கல்பனா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்பனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்