கடைக்கு சென்றவரை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு
கடைக்கு சென்றவரை வழிமறித்து செல்போன், பணம் பறிக்கப்பட்டது
மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.