கார் டிரைவர் தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-30 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 33). கார் டிரைவரான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சங்கரபாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சங்கர பாண்டியன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்