பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல் - ஒருவர் படுகாயம்

சிவகிரியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-06-23 18:45 GMT

சிவகிரி:

தென்காசியில் இருந்து குமுளி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தேனி மாவட்டம் உத்தமபாளையம் டி.என்.இ.பி. காலனி 1-வது தெருவைச் சேர்ந்த ஆண்டவர் (வயது 46) ஓட்டினார். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி சோதனைச்சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக பஸ் சென்றது. அப்போது தென்காசி மாவட்டம் மேலகரம் பார்க் தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (44) மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அதை பார்த்ததும் பஸ்சை டிரைவர் சோதனைச்சாவடி அருகில் நிறுத்தினார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரவிக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்