கன்னியாகுமரி கடலில் மிதந்த பெண் பிணம்

கன்னியாகுமரி கடலில் பெண் பிணம் மிதந்தது.

Update: 2023-07-04 18:39 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடல் பகுதியில் நேற்று காலையில் ஒரு பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பெண் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அந்த பெண்ணுக்கு சுமார் 55 வயது இருக்கும். அதைத்தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்