பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் பா.ஜ.க. அரசின் சாதனையை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்தது.

Update: 2023-06-26 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியில் பா.ஜ.க. அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. பார்வையாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் ராஜலஷ்மி சுந்தர்ராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீடு வீடாக சென்று பா.ஜ.க.வினர் பொதுமக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணிராஜ், வர்த்தக பிரிவு நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர தலைவர் சங்கர் ராஜ், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் பிரதீப் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்