வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2022-11-10 18:54 GMT

நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும், அசோசியேஷன் வெற்றிலை மண்டிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.6 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.2 ஆயிரத்து 500-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.800-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்