கைதான சகோதரர்கள் ஜெயிலில் அடைப்பு

கைதான சகோதரர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-08-05 20:25 GMT


விருதுநகர் தொழில் அதிபர் குமரவேல் கொலை வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட மையிட்டான் பட்டியை சேர்ந்த சகோதரர்கள் சிவப்பிரகாஷ் (வயது 24), ஹரிகரன் (22) ஆகிய 2 பேரிடம் விசாரணையை முடித்த தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கவிதா முன் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் வருகிற 18-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கவிதா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்