பரமத்தியில் வாய்த்தகராறில் மோதல்; 2 பேர் கைது

பரமத்தியில் வாய்த்தகராறில் மோதல்; 2 பேர் கைது

Update: 2022-09-28 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருடைய மகன் விஜயகாந்த் (வயது 27). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அஜந்தன் (24) கூலித்தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது விஜயகாந்திடம் இருந்து அஜந்தன் மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டுள்ளார். ஆனால் சாவியை விஜயகாந்த் தர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஜந்தன், விஜயகாந்த் மற்றும் அவரது தாய் ஜானகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் அதே பகுதியில் உள்ள அஜந்தனின் சித்தப்பா மகள் சரேந்தினியிடம் (25) மது குடித்து விட்டு சென்று தகராறு செய்தாராம். இதுகுறித்து அவர் தனது தம்பி அஜந்தனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற அஜந்தனுக்கும், விஜயகாந்துக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் விஜயகாந்த், அஜந்தனையும் அவருடைய சகோதரி சரேந்தினியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பரமத்தி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து அஜந்தன் மற்றும் விஜயகாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்