போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2023-06-24 19:00 GMT

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போதை பொருட்களை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்திச்சென்றனர். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தென்காசி போலீஸ் உட்கோட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள், போலீசார், ஆயுதப்படை போலீசார், ஜே.பி. கல்லூரி மற்றும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்