ஆனந்த விநாயகர் கோவில் குடமுழுக்கு

சிந்தாமணி ஆனந்த விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-09-09 16:10 GMT

வேளாங்கண்ணி:

கீழ்வேளூர் வட்டம் திருப்பூண்டி அருகே சிந்தாமணியில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், யாக சாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆனந்த விநாயகர் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், சிந்தாமணி கிராம மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்