பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-21 07:16 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நிதி பயன்படுத்தபட உள்ளது.

நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்