பெரியகுளம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

பெரியகுளம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-08-23 21:00 GMT

கம்பம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் தனுஷ்பாண்டி (வயது 19). இவர் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி தனுஷ்பாண்டி, அகமலையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்காக சென்றார். அப்போது அங்குள்ள மரத்தில் அவர் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென்று மரத்தில் இருந்து அவர் கீழே தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த தனுஷ்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனுஷ்பாண்டி இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்