மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்.

Update: 2023-04-09 18:47 GMT

குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நேற்று நெல்லை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெல்லை அருகே உள்ள சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த முப்புடாதி (வயது 31) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து முப்புடாதியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்