சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலி

சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.

Update: 2022-07-05 19:00 GMT

சேந்தமங்கலம்,-

சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.புதுச்சத்திரம் அருகே கதிராநல்லூர் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவர், நேற்று முன்தினம் இரவு ஒரு மொபட்டில் சிங்களாந்தபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அங்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பேளூக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்