12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-09-14 17:57 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே வெள்ளாஞ்சாரை சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 12 அடி நீளமும், 25 கிலோ எடையும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்