காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய உறவினர்கள்... பெற்றோர் உள்பட 6 பேர் கைது

இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2024-06-13 22:28 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த கார் டிரைவரான கவின்குமாரும் (வயது 24), எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷிணியும் (24) கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் தஞ்சம் புகுந்தனர். இதன்பின்னர் அவர்கள் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு பெண்ணின் உறவினர்கள் சிலர் கவின்குமார் வீட்டுக்கு வந்து, அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கிவிட்டு ரோஷினியை ஓசூருக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

உடனடியாக ஓசூருக்கு புறப்பட்டு சென்ற போலீசார், அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து ரோஷினியை மீட்டனர். இதைத் தொடர்ந்து ரோஷினியை கடத்தி சென்றதாக அவருடைய தந்தை கோபாலகிருஷ்ணன், தாயார் சாந்தி, தாய்மாமன் நஞ்சுண்டன் மற்றும் உறவினர் ரவிக்குமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணை உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்