6 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடியில் 6 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-19 18:45 GMT

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீண்டும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 விசைப்படகு தொழிலாளர்கள் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த மீனவர்களை விசைப்படகில் பணியாற்ற விசைப்படகு உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இதனால் அந்த மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த நிலையில் 6 தொழிலாளர்களை ஏற்ற மறுத்த 6 விசைப்படகுகளும் இன்று (திங்கட்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்