அரசு வேலைக்காக காத்திருக்கும் 53 லட்சம் பேர் - தமிழக அரசு வெளியிட்ட தகவல்

அரசு வேலைக்காக பெயர்ப் பதிவு செய்து காத்துக்கொண்டு இருப்பவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2024-06-05 19:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் உள்பட பலர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர்ப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை 53 லட்சத்து 48 ஆயிரத்து 663 பேர், அரசு வேலைக்காக பெயர்ப் பதிவு செய்து காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அவர்களில் ஆண்கள் 24 லட்சத்து 63 ஆயிரத்து 81; பெண்கள் 28 லட்சத்து 85 ஆயிரத்து 301; மூன்றாம் பாலினத்தவர் 281 ஆகும். அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 353; 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 27 ஆயிரத்து 649; 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 93 ஆயிரத்து 40;

46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 811; 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 7,810 ஆகும். அவர்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1.50 லட்சமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்