குடிமை பணிகள் முதல் நிலை தேர்வை 2,803 பேர் எழுதினர்

குடிமை பணிகள் முதல் நிலை தேர்வை 2,803 பேர் எழுதினர்.

Update: 2023-05-28 20:15 GMT

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குடிமை பணிகள் முதல் நிலை போட்டித் தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5,031 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் தேர்வர்களை காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர்.

பின்னர் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

இதையடுத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ம் தாள் தேர்வும் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 5 ஆயிரத்து 31 பேரில் 2,803 பேர் தேர்வு எழுதினர். 2,228 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வை கண்காணிப்பதற்காக சப்-கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்