தமிழக மீனவர்கள் 22 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

Update: 2023-11-18 08:28 GMT

கோப்புப்படம் 

ராமேஸ்வரம்,

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன் கடல் பகுதி அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

மேலும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்