தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை, ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-08-28 06:27 GMT
புதுடெல்லி, 

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்று தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

மேலும் செய்திகள்