தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.;

Update:2020-07-13 13:55 IST
சென்னை

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது 

தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு  இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாக கூறினார்

மேலும் செய்திகள்