மதுபானம் விற்ற 2 பேர் சிக்கினர்

மதுபானம் விற்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-15 18:45 GMT

போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 65), போடி முனிசிபல் காலனியை சேர்ந்த வேலு (44) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்