தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-07-10 21:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

நெல்லையை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் விருதுநகர் வந்தபோது 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்ைல கொடுத்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிப்பாண்டியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து இசக்கிப்பாண்டிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்