தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன்- சிறுமி பலி - டிரைவர் கைது

தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன், சிறுமி பலியாகினர். தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-02 19:00 GMT

வசாய், 

தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன், சிறுமி பலியாகினர். தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வேன் மோதி விபத்து

பால்கர் மாவட்டம் தகானு தாலுகா மோட்காவ்-கோப்ரிபாடா பகுதியில் கடந்த 30-ந்தேதி 7 வயது சிறுவன் தனது 12 வயது சகோதரியுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற அக்காள், தம்பி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து நடந்த உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

2 பேரும் பலி

இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த பொதுமக்கள் சிறுவன், சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய வேன் டிரைவரை தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவான 27 வயது வேன் டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்