எருமைகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரெயில் சேதமடைந்த சம்பவம் - மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

எருமைகள் மீது மோதி வந்தே பாரத் ரெயில் சேதம் அடைந்த சம்பவத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-07 09:19 GMT

மணிநகர்,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரெயில், வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது. இதில், விரைவாக வந்த ரெயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரெயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த நிலையில் எருமைகள் மீது மோதி வந்தே பாரத் ரெயில் சேதம் அடைந்த சம்பவத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்