பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2024-01-12 02:47 GMT

புதுடெல்லி,

சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வக்கீல் இ.சி. அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வக்கீல் புல்கித் தாரேவும் மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், வயதுமூப்பை கருத்தில் கொண்டு சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்