மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

மத்திய பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-02 06:53 GMT

போபால்,

மத்தியபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஜபல்பூருக்கு கிழக்கே 46 கி.மீ. தொலைவிலும், 24 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் கடந்த வாரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்