சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி: சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்

சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 14:50 GMT

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், "ஆந்திர முதல்-மந்திரியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். சந்திரபாபு நாயுடு ஒரு முற்போக்கான முதல்-மந்திரி. மேலும் அவர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். ஆந்திராவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்