ராஜஸ்தானின் கோட்டா நகரில் 2 நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை

2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

Update: 2023-06-28 23:39 GMT

கோட்டா,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மைய நகரில் ஏராளமான மாணவர்கள் தங்கி பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். உத்தரபிரதேசத்தின் ஜாவுன்பூர் நகரை சேர்ந்த ஆதித்யா சேத் என்ற 17 வயது மாணவரும், விக்யான் நகர் 2-வது செக்டாரில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தான்.

இந்த நிலையில் ஆதித்யாசேத், நேற்று முன்தினம் இரவில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தான். சிறந்த மாணவரான ஆதித்யா சேத், 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நீட் பயிற்சிக்கு கோடா நகருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல உதய்பூரை சேர்ந்த மெகுல் வைஷ்ணவ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர் 10-ம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில் நீட் பயிற்சி பெற்று வந்தார். இந்த இரு மாணவர்களின் இறப்பையும் சேர்த்து, 2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்