மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து பெண் ஊழியர் பலி

புனே ஷிகாவ்கட் பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா(வயது45). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மராத்தி பத்திரிகை ஒன்றில் மார்க்கெட்டிங் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

Update: 2018-02-11 23:02 GMT

புனே,

சுவர்ணா கடந்த 7–ந்தேதி வேலை வி‌ஷயமாக புனே மாநகராட்சிக்கு இருசக்கர வாகனத்தில் சுவர்ணா வந்திருந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிவாஜி மேம்பாலம் அருகே அவர் சென்றுகொண்டு இருந்தபோது, அறுந்த வந்த காற்றாடியில் இணைக்கப்பட்ட மாஞ்சா கயிறு அவரது கழுத்தை பதம் பார்த்தது. இதனால் நிலைகுலைந்து சுவர்ணா சாலையில் கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை சாலையில் சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சுவர்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்