ஐபிஎல் : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் தீவிர முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.
அதே போல் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்தில் உள்ளது
முதல் வெற்றியை பெற மும்பை அணியும் தோல்வியிலிருந்து மீள பஞ்சாப் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.