அந்த இயக்குனருடன் மீண்டும் பணியாற்ற விரும்பும் நானி

நானி தற்போது 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Update: 2024-08-19 02:16 GMT

சென்னை,

தமிழில் 'நான் ஈ' படத்தின் மூலம் பிரபலமானவர் நானி. இவர் தற்போது, விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது.

இப்படம் வரும் 29-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நானி, விவேக் ஆத்ரேயா உடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக கூறினார். இந்த கூட்டணி இதற்கு முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'அடடே சுந்தரா' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியது.

இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. நானி கூறியதுபோல் மீண்டும் இணைந்தால் அது அவர்களது 3-வது படமாக இருக்கும். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்