தனுஷின் 'ராயன்' படத்திற்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டு!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ‘ராயன்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

Update: 2024-07-30 13:28 GMT

சென்னை,

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'ராயன்' திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏ. ஆர். ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படமானது வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களில் ரூ 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் 3 நாளில் இத்தனை கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப்படம் ராயன்தான்.

இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு 'ராயன்'படத்தைப் பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'ராயன்.. தனுஷ் அற்புதமாக இயக்கி நடித்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரகுமானின் புல்லரிக்கும் இசை. பார்க்க வேண்டிய திரைப்படம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்