50வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்... தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து பதிவு..!

பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்துள்ளார்.

Update: 2023-12-15 09:14 GMT

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்துள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்' என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்