அதர்வா நடிக்கும் 'டி.என்.ஏ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அதர்வா நடிப்பில் உருவான ‘டி.என்.ஏ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Update: 2024-07-20 16:16 GMT

சென்னை,

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா.

இதனையடுத்து தற்போது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் 'டி.என்.ஏ'  திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.


ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 'டி.என்.ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 'டி.என்.ஏ'  படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இப்படத்தில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்