குழந்தையுடன் ஓணம் கொண்டாடிய நடிகை அமலா பால்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Update: 2024-09-15 15:50 GMT

திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் நடைபெற்றது. திருமணம் ஆன ஒரு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் அறிவித்தார். அதன் பின்பு கடந்த ஜூன் 11ஆம் தேதி அமலாபாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அமலா பால் முதன்முறையாக தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரம்பரிய முறையில் கையில் குழந்தையுடன் கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதில் அவரது குழந்தையும் செம க்யூட்டாக உள்ளது. இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்