ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னை - கோவா ஆட்டம் 'டிரா'

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - எப்.சி.கோவா அணிகள் மோதின.

Update: 2024-10-25 00:56 GMT

Image Courtesy: @FCGoaOfficial / @IndSuperLeague

சென்னை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - எப்.சி.கோவா அணிகள் மோதின. சென்னையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. இறுதியில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்