ஐ.எஸ்.எல்.கால்பந்து: பஞ்சாப் எப்.சி-யை வீழ்த்தி வெற்றி பெற்ற பெங்களூரு

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-10-18 16:17 GMT

Image Courtesy: @bengalurufc

பெங்களூரு,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி , நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி பெற்றது

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் பெங்களூரு ஒரு கோல் போட்டது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி-யை வீழ்த்தி பெங்களூரு எப்.சி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்