மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 201 ரன்கள் குவித்தது.

Update: 2024-07-21 11:53 GMT

image courtesy: twitter/@ACCMedia1

தம்புல்லா,

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 201 ரன்கள் குவித்தது. இது மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும் குவித்தனர். யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. அணியால் இந்திய பந்துவீச்சை சமாளித்து அதிரடியாக விளையாட முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய யு.ஏ.இ. அணி 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய இந்தியா நடப்பு தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்