ஐ.பி.எல்: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

குமார் சங்கக்கரா விலகி உள்ள நிலையில் ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-09-04 10:54 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எ.ல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.அதோடு அடுத்த ஆண்டு ஐ.பி.எ.ல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த குமார் சங்கக்கரா அந்த பதவியில் இருந்து விலகி உள்ள நிலையில் ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்